Categories
தேசிய செய்திகள்

இன்றே கடைசி நாள்…. இனி இந்த திட்டம் கிடையாது…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர் அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கியின் என்ற திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தியது. இதனால் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியானது உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐசிஐசிஐ வங்கியின் இந்த திட்டத்தில் பொதுமக்களும், மூத்த குடிமக்களும் சேர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் பொதுமக்களை விட மூத்த குடிமக்களுக்கு கூடுதலான வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. அதாவது மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமும் பொதுமக்களுக்கு 6 சதவீதம் வட்டியும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஐந்து வருடங்கள் என்பது முதிர்வு காலம். அதன்பிறகு பத்து வருடங்கள் நீட்டிப்பு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு 2 கோடியாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் புதிதாக யாரும் இனி சேர முடியாது. அக்டோபர் ஏழாம் தேதியான இன்றோடு இந்த திட்டம் முடிவடைகிறது. முன்னதாக சேர்ந்துள்ள பயனர்கள் மட்டுமே இதனுடைய பலன்களை அடையலாம்.

Categories

Tech |