பல்வேறு துறைகளில் நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள விருதுகளில் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசாகும். இந்த விருதானது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், இலக்கியம்,வேதியல் என பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர் எழுதிய எல் அகுபேஷன் புத்தகம் உலக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.