தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அரசு முறை பயணமாக செக் குடியரசு நாட்டில் நடைபெறும் MSV கண்காட்சியில் கலந்து கொண்டார். குடியரசு நாட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற MSV கண்காட்சியில் துவக்க விழாவில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்கள் முன்னிலையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையான உறவில் வலிமையும் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் திறமையான தொழிலாளர்கள் உள்ளனர்.
தமிழக இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிக செய்வதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகம் 4 பெரிய துறைமுகங்கள், நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் என ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் ,விமானம் தயாரிப்பு, பாதுகாப்பு மருந்து போன்ற துறைகளில் 5 மில்லியனுக்கு அதிகமான MSME நிறுவனங்கள் உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலை தமிழகத்தில் உள்ள MSME நிறுவணங்கள் உலகளாவிய வர்த்தக தொடர்பின் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனையடுத்து செக்குடியரசு மற்றும் தமிழகம் பல பொதுவான தொழில்கள் உள்ள நிலையில் குறிப்பாக வாகன உற்பத்தி தொழில், கனரக தொழில், பாதுகாப்பு மற்றும் விமான தயாரிப்புத் துறையில் பல வணிக வாய்ப்புகள் உள்ளது.
Hyundai, BMW, Renault மற்றும் Nissan போன்ற முக்கிய வாகன தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளதால் தமிழக இந்தியாவின் வாகன உற்பத்தியில் மையமாக திகழ்கிறது. இது போன்ற பெரும் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் உள்ள MSME நிறுவனங்கள் உதிரி பாகங்கள் வழங்குகின்றன. இதனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை ஒரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. அதனை தொடர்ந்து இந்தியாவின் கனநகரம் உபகரணங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 8% ஆகும். விமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறைக்கு 21.9 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துறையின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட தொழில் பெறும் வழிதடம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த துறைகளை தவிர்த்து ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் உற்பத்தியும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக திகழ்வதால் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முனைவோர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.