தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொளியாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையை நம்பித்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது.
மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுகின்றது. இதன் விளைவாக அணையின் நீர்மட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 129.10 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 484 கன அடியாகவும் இருந்தது. இதனிடையே லோயர் கேம்பில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 126 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.