Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இதற்கான அனுமதிச் சீட்டை பெறலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!!

அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது.

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டை இன்று முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்படி, அனுமதி சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்  செய்யலாம். அதன்பிறகு தேர்வர்கள் அனுமதிச் சீட்டை பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.

 

Categories

Tech |