Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கேட்டதற்கு அடி-உதை…. தந்தை உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் வீட்டிற்கு சென்று நடேசன், அவரது மனைவி வரலட்சுமி, உறவினர்களான அய்யனார், வெங்கடேசன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த நடேசன், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் நல்ல தம்பி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |