Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார்.

இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற நபரும் அவரின் மகனும் பரிதாபமாக பலியாகினர். ஓட்டுநர் அபினவுக்கு 3000 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாகனத்தை 4 மாதங்களுக்கு ஓட்ட முடியாத வகையில் தடையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறான, விபத்திற்கு அதிகபட்சமாக 5,000 டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். மேலும், 5 வருடங்கள் வாகனத்தை இயக்க தடை அறிவிப்பார்கள். 2 வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும். ஆனால், இந்த சம்பவத்தில் அபினவிற்கு சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |