குடும்ப அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு வசதியாக அக்டோபர் எட்டாம் தேதி மக்கள் குறை தீர் முகாம் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்று பயன் பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இது பற்றி வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவிப்புள்ளது.
அதன்படி அக்டோபர் 2022 ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 8.10.2022 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் போன்றோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படுகிறது. பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் குறைபாடுகள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் கூறினால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என கூறப்பட்டுள்ளது.