பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா கும்பல் அதிக அளவில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். சக்தி வாய்ந்தவர்களாக அவர்கள் சிறையில் உலா வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றி அறிக்கை ஒன்றை உளவு மையத்தின் பணியாளர் சிறைகளுக்கான ஐஜி மிர்சா சாஹிப் சலீம் பெய்க்கியிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து டான்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்களை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலில் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என சிறை பணியாளர் ஒருவர் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார் என அறிக்கை கூறுகின்றது. இதனால் பஞ்சாப் நிர்வாகத்தின் கையாளாகாத செயல்பாட்டின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்தது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் அவதூருக்கும் வலியுறுத்தும் என கூறப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து கூடுதல் செயலர் மட்டத்திலான உயர் அதிகாரி தலைமையில் அதிக ஆற்றல்மிக்க கமிட்டி இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளும்படியும் உளவுத்துறை ஊழியர் வலியுறுத்தி இருக்கின்றனர். இது தவிர கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறையில் கைதி ஒருவரை சந்திப்பதற்கு வரும் ஒரு சிறுமி கைதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வருகின்றார் எனவும் அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி சிறைக்கு வெளியே 500 ரூபாய்க்கு விற்கப்படும் சாராய பாக்கெட்டுகள் சிறைக்குள்ளே 3000 முதல் 3500 வரை ஜோராக விற்பனை செய்யப்படுகிறது என அந்த அறிக்கை கூறியுள்ளது.