காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் எந்த மதத்திற்கு திமுக எதிரில் இல்லை என்று பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஆ ராசாவை கூப்பிட்டு முதல்வர் கண்டித்துள்ளாரா? அவ்வாறு செய்யவில்லையே அல்லது அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினாரா? அதுவும் செய்யவில்லையே. ஒரு பக்கம் நாங்கள் இந்து மதம் உள்ளிட்ட எந்த மதத்திற்கும் எதிரியில்லை என்று கூறுவது, ஆன்மீகத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்று கூறுவது.
ஆனால் மறுபக்கத்தில் இதனைப் போல பேசுகிறவர்களை கண்டுக்காமல் ஊக்கப்படுத்துவது. இதனையடுத்து எந்த மதத்தையும் இழிவு படுத்தினால் நான் விடமாட்டேன், அவர்களை நான் உண்டு இல்லை என்று செய்துவிடுவேன். அவர்களது பதவியை பறித்து விடுவேன். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றெல்லாம் கூறலாம். முதல்வர் பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும் என்பதற்காக மட்டும் பேசினால் போதுமா? ஆனால் இவை எல்லாம் பசப்பு வார்த்தைகள், ஏமாற்று வார்த்தைகள், மோசடியான வார்த்தைகள் என்று மக்களுக்கு தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.