Categories
கரூர் மாவட்ட செய்திகள்

21 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்த மூதாட்டி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள ஆலமரத்து மேடு பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாதேவி என்ற மனைவி உள்ளார். கடந்த 21 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த அருணாதேவி தனது அக்கா மகன் ராஜசேகர் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு சர்க்கரை வியாதி மற்றும் வயிற்று வலி இருப்பதால் மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு வாழ பிடிக்கவில்லை செத்துவிடலாம் போல இருக்கிறது என கூறிவிட்டு மூதாட்டி அழைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்த போது மூதாட்டி தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |