Categories
மாநில செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!!

கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த துயரமான செய்தியினை கேட்டு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |