மியான்மர் நாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்டுள்ளனர்.
நமது தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் ஆன்லைனில் வேலை தேடியுள்ளனர். அப்போது இவர்களை தொடர்பு கொண்ட ஒரு கும்பல் மியான்மர் நாட்டில் வேலை இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்களை சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதனை மறுத்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி கடுமையான தண்டனைகளை கொடுத்து பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 10-க்கும் தமிழர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர். அதன் பின்னர் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றுள்ளார்.