Categories
சினிமா தமிழ் சினிமா

மகாலட்சுமி வீட்ல இருந்து…. இது மட்டும் தான் கொடுத்தாங்க…. உண்மையை போட்டுடைத்த ரவீந்தர்….!!!!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். இந்நிலையில்  திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமிக்கு அவருடைய கணவர் 300க்கும் மேற்பட்ட பட்டுச்சலை, பெரிய பங்களா, தங்க ஆபரணங்கள் என பல பரிசுகளை வாரி வழங்கியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த ரவீந்தர், தன்னிடம் ஏற்கனவே ஆடி கார் உள்ளதாகவும், மகா வீட்டில் பல பொருட்கள் இருப்பதாகவும் தன்னுடைய திருமணத்தில் தனக்கு இரண்டு மோதிரங்கள் மட்டுமே அவர்கள் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மகாலட்சுமிக்கு திருமணத்திற்கு முன்பாக எந்த பரிசும் கொடுத்ததில்லை என்று கூறிய அவர் திருமணத்திற்கு பிறகு தான் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |