பிரபல தொழிலதிபர் ஒருவர் உக்ரைன்- ரஷியா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷிய படைகள் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இந்நிலையில் ரஷிய படையிடமிருந்து முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதுகுறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரஷியா தன்னுடன் இனைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐ.நா. சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் போரில் இரு தரப்பு அமைதியை ஏற்க வேண்டும். மேலும் மக்கள் 2 நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னுடைய டுவிட்டர் பகுதியில் கூறியதாவது. அதில் உங்களுக்கு ரஷியா ஆதரவு ஏலான் மாஸ்கா அல்லது உக்ரைன் எலான் மஸ்கா என போட்டி வாக்கெடுப்பு நடத்திருக்கிறார் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என அவர் கூறினார். இதனை பார்த்த எலான் மாஸ்க் மீண்டும் டுவிட்டரில் பதிவு செய்ததாவது பெரிய அளவில் போர் ஏற்பட்டால் உக்ரைன் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிக குறைவாக இருக்கிறது. ஏனென்றால் ரஷியாவின் மக்கள் தொகையில் 3 மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் உக்ரைன் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அமைதியை தேடுங்கள் அமைதி தான் சிறந்த வழி என கூறியுள்ளார்.