கோவை மாவட்டத்தை சேர்ந்த பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்றுவரும் இல்லத்து அரசிகள் டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்கள் குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தி அசத்தி இருக்கின்றனர். அந்த அணிவகுப்பு உலகச்சாதனை முயற்சி ஆக வெறும் மூன்று மணிநேரத்தில் மட்டும் 300ஆடைகள் 70 மாடல்களை வைத்து நடந்தது. இதற்குரிய துவக்க நிகழ்ச்சியானது பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடந்தது.
கோவை அவினாசி சாலையில் உள்ள பன் மால் வணிக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பிரபல பெண் பத்திரக்கையாளர் வாசுகி ராஜா, சர்வதேச ஜூனியர் மாடல் ராணா சிவக்குமார், யு.ஆர்.எஃப் சாதனை புத்தகத்தின் ஜூரி சுனில் ஜோசப், தீர்ப்பாளர் சியா ஸ்ரீ,பி ரபல நடிகர் மேக்கப் கலைஞர் சத்யா, பிரபல மாடல் மணிகண்டன், மருத்தூவரும் திருமதி கோயமுத்தூர் காயத்ரி நடராஜன் போன்றோர் பங்கேற்றனர். சாதனை நிகழ்ச்சியில், கூடுதல் சிறப்பாக சாதாரண இல்லத்தரசிகள் வடிவமைத்த ஆடைகளை அவர்களது குழந்தைகளே அணிந்துவந்து ஒய்யார நடை நடந்து அசத்தினர். இவர்களது இச்சாதனை யூ.ஆர்.எஃப் .உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.