கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் நாகர்கோவிலில் இருக்கும் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி கூறியுள்ளார்.
இதனை வெளியே யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த மாணவர் மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.