Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் சப்ளையர் சிறுவன் செய்த காரியம்..! பக்கத்து வீட்டு துப்பால் சிக்கினான்

பெங்களூரில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேபாளத்தை சேர்ந்தவர் அமீர் (16) பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெங்களூரில் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணி செய்து வந்தான்.

இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த அகிரிதி (19) என்ற பெண் வேலை செய்து வந்தார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர். பின்னர் காதலர்களாக மாறினார்கள்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் பெற்றோரின் வீட்டை விட்டு ஓடி வந்த அகிரிதி (19) அமீர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் தங்கினார். தங்கள் மகளின் இந்த  செயலால் அவமானம் தாங்கா முடியாமல்  அவர் பெற்றோர் நேபாளத்துக்கு சென்றுவிட்டனர்.

அதே சமயம் அமீரின்  பெற்றோர் தங்கள் மகனுக்கும்  அகிரிதி-க்கும்  கடந்த 15ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். பின்னரும் இருவரும்  கணவன் மனைவியாக வாழ்க்கையை  தொடங்கினார்கள்.

இந்நிலையில்  அமீரின்  வயது குறித்து  அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்தது…மேலும்  பிஞ்சிலேயே பழுத்தது.. இந்த வயசுல தேவையா … என்று  வசைபாட தொடங்கினர்.

அதுமட்டும் அல்லாமல் இதுகுறித்து காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இருவரின் வயது சான்றிதழ்களையும் பார்த்தபோது அமீருக்கு 16 வயதும் , அகிரிதிக்கு  19 வயது என்பது உறுதியானது.

இதையடுத்து சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அகிரிதி மாமனார் மாமியாருக்கு விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Categories

Tech |