Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… “வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த மண்ணில் தழைத்து  வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றுமே இடமில்லை. மேலும் இது காந்திய மண் என சூளுரைப்போம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

Categories

Tech |