உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஷ் ஸ்டோன்கள் மூலமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க இருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாங் ரெட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் பேசும்போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க உதவும் விதமாக நான்கு அதிநவீன ஐ ஆர் ஐ எஸ் டி வான் பாதுகாப்பு அமைப்புகளை வருகின்ற நாட்களில் ஜெர்மனி உக்ரைனுக்கு கொடுக்க இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் உலகின் அதிநவீன ஐ ஆர் ஐ எஸ் டி வான் பாதுகாப்பு ஆயுதம் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 150 மில்லியன் ஹீரோக்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆயுதங்களை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜெர்மனி இந்த முடிவை அறிவித்திருக்கிறது.