Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளிக்காக காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி…. மொத்தமும் அபேஸ்…. பெரும்அதிர்ச்சி…..!!!!

சேலம் மாவட்டத்தில் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வெள்ளி மற்றும் தங்க நகை தொழில் செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஏலச்சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளிக்காக 52 வார தீபாவளி சீட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் பண தேவைக்காக மக்கள் பலரும் இவரிடம் சீட்டு பணம் கட்டியுள்ளனர்.

இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீட்டு முடிவடைந்த நிலையில் யாருக்கும் பணம் தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் சீட்டு கட்டியவர்கள் ராமமூர்த்தி இடம் கேட்டபோது திங்கட்கிழமை சீட்டு பணத்தை தருவதாக கூறியுள்ளார்.அதற்குப் பிறகு ராமமூர்த்தி குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகினர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தீபாவளி சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Categories

Tech |