Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்….. தாத்தா உள்பட 3 பேர் கைது….. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானார்.

இதுகுறித்து தாத்தா உறவு முறை வரும் சின்னசாமி(55) என்பவரிடம் சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து சின்னசாமி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதனால் மாத்திரையை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் அர்ஜுனன்(60) என்பவரிடம் திருநீறு வைப்பதற்காக சின்னச்சாமி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தாத்தா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அர்ஜுனனும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சிறுமி காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக பழனிக்கு சென்றுள்ளார். அங்கு ஈஸ்வரன் என்பவர் சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அர்ஜுனன், சின்னச்சாமி, ஈஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் விக்னேஷை தீவிரமாக தேடி வருகின்றனர். பின்னர் கோவையில் இருக்கும் காப்பகத்தில் சிறுமி ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |