Categories
மாநில செய்திகள்

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுக…. இதுதான் அவங்க சாதனை…. அரக்கோணம் ரவி அதிரடி பேச்சு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டில் 15-வது நிதிக் குழு மானியம் வாயிலாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் மக்கள்நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அமைச்சர் காந்தி திறந்து வருகிறார்.

தி.மு.க அரசு பொறுப்பேற்று மக்கள் விரோத சாதனையாக அரக்கோணம் பகுதியில் இயங்கிவந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்றி மக்களை அலைக்கழிப்பது திமுக-வின் சாதனை. அதேபோன்று சென்ற அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாணவர்களின் நலனை கருதி அரசு திட்டங்கள் மாணவர்களுக்கு உடனே சென்றடைய ஏதுவாக அரக்கோணம் மாவட்ட கல்வி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

அதனை இப்போது ராணிப்பேட்டைக்கு மாற்றியமைத்தது தான் தி.மு.க-வின் சாதனை. மேலும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் வேறு இடத்திற்கு மாற்றி மக்களை அலைக்கழிக்கும் விரோத போக்கை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் எனும் முறையில் கண்டிப்பதாகவும் அ.தி.மு.க துணை கொறடா அரக்கோணம் ரவி தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |