தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த மாதம் 23-ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் disney+ hotstar ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பப்ளிபவுன்சர் படம் தொடர்பாக தமன்னா ஒரு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, திரையுலகை பொருத்தவரை ஹீரோயின்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரி தான் உடை அணிய வேண்டும் என்ற சில நிர்பந்தங்கள் இருக்கிறது. இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாகும். ஆனால் தற்போது ஹீரோயின்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள். அதற்கு சாட்சி தான் பப்ளிபவுன்சர் திரைப்படம் என்று கூறினார்.