Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐந்து மொழிகளில் அசத்தலாக நன்றி தெரிவித்த விக்ரம்”….. ட்விட்டரில் வீடியோ பதிவு….!!!!!!

ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்ரம்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30 தேதியன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருக்கின்றார். தனது திறமையான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ”நன்றி, தேங்க்ஸ், சுக்ரியா, நன்னி, தன்யவாத் என இப்படி எந்த மொழியில் சொன்னாலும் கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக இருக்கின்றது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகாலன் கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி. நான் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளேன். நிறைய நல்ல வேடத்திலும் நடித்துள்ளேன். எப்போதும் எல்லா படங்களையும் என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமை கொள்வேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கின்றது. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குனர் மணிரத்னத்திற்கும் நன்றி என கூறியுள்ளார்.

Categories

Tech |