Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மருந்து கடைகளில் ஊசி போடுவதும், அங்கு வேலை பார்ப்பவர்கள் வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்குவதும் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கிராமப்புறங்களில் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் கூடுதல் செலவாகும் என கருதி போலி மருத்துவர்களிடம் ஊசி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிடுவதால் பக்க விளைவுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |