Categories
மாநில செய்திகள்

திராவிட மாதம்….. ட்விட்டர் ஸ்பெஷலில் கடைசி நாளில் இறங்கிய ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் திமுகவினர்….!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் ஆட்சி பெற்றதில் இருந்து இருந்து மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் . மக்கள் நல பணித்திட்டங்கள் மட்டுமில்லாமல் கொள்கை ரீதியாவும் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு ,திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிடக் கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞர் அணியின் கொள்கை ரீதியாக வலுப்படுத்தக் கூடிய வகையில் இத்தகைய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று கொண்டாட திமுக தகவல் தொழில்நுட்ப அணி முடிவு செய்துள்ளது. இதற்காக தினம் தேர்வு ட்விட்டர் ஸ்பெஷலில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். இதுவரை மூன்று லட்சத்திற்கு அதிகமான twitter special தளத்தில் இணைந்து தலைவர்களின் உரைகளை கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்புகள் ஒவ்வொரு தலைவர்கள் என்ற வகையில் 29 நாட்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

அதன்படி முதல் நாளில் திராவிட மாடல் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயரஞ்சன், இரண்டாவது நாளில் உலகெங்கும் திராவிடம் என்ற தலைப்பில் மு.மு.அப்துல்லா எம்.பி, 3 வது நாளில் திராவிட பொருளாதாரம் என்ற தலைப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 4 வது நாளில் திராவிடத்தால் கற்றோம் என்ற தலைப்பில் அமைச்சர் க.பொன்முடி, 5 வது நாளில் திராவிட மேடை என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உரையாற்றினர். அதனைப்போல தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, பீட்டர் அல்போன்ஸ், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி ஆகியோர்  உரையாற்றியுள்ளனர். இந்நிலையில் திராவிட மாதம் கொண்டாடத்தின் கடைசி நாளான இன்று இரவு 8 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார். இவர் திராவிட அரசு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். ட்விட்டர் ஸ்பெஷலில் உரையாற்றும் முதல் தமிழக முதல்வர் என்ற பெருமை ஸ்டாலின் பெற போகிறார். இதில் பலரும் இணைந்து முதல்வரின் உரையை கேட்டு பயன்பெறுமாறு திமுக இளைஞரின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |