Categories
மாநில செய்திகள்

அக்.,1 முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி…!!

ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும்.

பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் அக்., 1 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |