அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பரவியேற்ற பின் முதன் முறையாக விருதுநகர் மாவட்டத்திற்கு பழனிசாமி சென்றுள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மலர் தூவியும் மேளதாளங்கள் முழங்கவும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசே கண்டித்து சிவகாசியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பேசிய போது அதிமுக தமிழகத்தில் 32 காலம் ஆட்சி செய்துள்ளது.
ஆனால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலம் என சொல்வதற்கு அடித்தளம் இட்டது அதிமுக திராவிட மாடல் திராவிட மாடல் என மூச்சுக்கு 300 தடவை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அப்படி என்ன திராவிட மாடல் ஆட்சி செய்கின்றீர்கள் திராவிட மாடலுக்கு சொந்தக்கார கட்சி அதிமுக திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான். ஆனால் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நக்கலாக பேசுகிறார் அது உங்கள் பணம் அல்ல மக்கள் பணம் இதற்கெல்லாம் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.