Categories
சினிமா தமிழ் சினிமா

“நானே வருவேன்” தனுஷுக்கு இப்படி நடப்பது 3-வது முறை…. ரசிகர்கள் கருத்து…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்தது. இந்தப் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நானே வருவேன் படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

நானே வருவேன் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் கிடையாது. இது 3-வது முறையாகும். ஏனெனில் பட்டாசு திரைப்படத்திற்கு மட்டும்தான் அதிகாலை 4 மணி காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் வைக்கப்படவில்லை. இந்த படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் தொடங்கியது. இந்த சூழலில் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை ரிலீசாக இருப்பதால் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நானே வருவேன் திரைப்படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தான் படத்தை இன்று ரிலீஸ் செய்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |