தமிழில் கேரள நாட்டிளம் பெண்களுடனே திரைப்படத்தில் நடித்தவர்தான் அபிராமி சுரேஷ். அத்துடன் குபேர ராசி, கேள்வி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் பாடகியாகவும் இருக்கிறார். பிரபல பாடகியான அம்ருதா சுரேஷ் இவரது சகோதரி ஆவார். இதனிடையில் அபிராமிக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் அவதூறுபதிவுகள் வெளியாகி வந்தது.
இதன் காரணமாக கோபமடைந்த அபிராமி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தனக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் சைபர் தாக்குதல் நடக்கிறது. தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
ஆகவே வரம்பு மீறுவதை ஏற்கமுடியாது. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்குரிய உரிமையை பறிக்கிறீர்கள். அத்துடன் மன ரீதியாக தொந்தரவு செய்கிறீர்கள். என்னையும், என் குடும்பத்தினரையும் சமூகவலைத்தளங்களில் அவதூறு செய்வதை கடுமையாக எடுத்துக் கொள்வோம். அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.