சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருங்குறுக்கை கிராமத்தில் நடராஜன்(73) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018- ஆம் ஆண்டு கடைக்கு சாக்லேட் வாங்குவதற்காக 6 வயது சிறுமி சென்றுள்ளார். அப்போது நிறைய சாக்லெட்டுகள் தருகிறேன் எனக்கூறி நடராஜன் சிறுமியை கடைக்கு பின்புறம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நடராஜனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி நடராஜனுக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.