Categories
தேசிய செய்திகள்

2021-22 ஆம் வருடம் உள்நாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட.. மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்…!!!!

நாடு முழுவதும் மத்திய அரசால் பாதுகாக்கப்படும் கட்டணம் வசூலிக்கும் நினைவுச் சின்னங்கள் ஏராளமானவை அமைந்துள்ளது. அதில் ஒன்றாக ஆக்ராவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தாஜ்மஹால் விளங்குகிறது. இந்த சூழலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய சுற்றுலா புள்ளி விவரங்கள் 2022 என்னும் பெயரில் 280 பக்கங்கள் கொண்ட அறிக்கையை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் 2021- 2022 ஆம் வருடத்தில் உள்நாட்டு பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக தாஜ்மஹால் முதலிடத்தை பிடித்துள்ளது. இது பற்றி அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2021- 22 ஆம் வருடத்தில் மொத்தம் 30 லட்சத்து 29 ஆயிரம் உள்நாட்டு பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டு இருக்கின்றனர். அதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செங்கோட்டை மற்றும் குதுப்மினார் கட்டிடங்கள் உள்நாட்டு பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களாக இருக்கிறது. இதனை அடுத்து கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாட்டு பயணிகளின் வருகை குறைந்து இருப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |