Categories
அரசியல்

தங்கம் புதிய உச்சம் ”கிராம் ரூ 4,012…. சவரன் ரூ 32,096” பொதுமக்கள் அச்சம் …!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ272 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை  நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாயும், சவரனுக்கு 272 ரூபாயும் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 உயர்ந்து ரூ 32,096-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 34 உயர்ந்து ரூ 4,012-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ 70 காசு  உயர்ந்து  ரூபாய் 52.30-க்கு  விற்பனை செய்யப்படுகின்றது.

இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ள தங்கம் ஒரு கிராம் 4 ,000 ருப்பையையும் , சவரன் 32,000த்தையும் தண்டியுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |