நாட்டில் முன்பு இருந்த நிலையைவிட இப்போது ஐடி நிறுவனங்கள் அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் ஐடி துறையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து பணியமர்த்த நிறுவனங்கள் தயாராகவுள்ளது. ஆகவே அதிக ஊதியம் வழங்கும் நிறுவனத்தில் பணிவாய்ப்பை அடைந்தால் பழைய நிறுவனத்தைவிட்டு ஊழியர்கள் வெளியேற தயாராகிவிட்டனர்.
இதனால் ஐ.டி நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் தங்களது நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க இப்போது ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகிய சில நுட்பங்களை செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இன்போசிஸ் நிறுவனம் தன் ஊழியர்களுக்கான சில புது அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. முன்பாக ஒரு இன்போசிஸ் ஊழியர் மேனேஜராக 12 -13 வருடங்கள் ஆகும்.
எனினும் இனி பிளாட்டினம் கிளப் வாயிலாக அதிக திறமையுள்ள ஒரு புது ஊழியர் 7 வருடங்களில் மேலாளராக முடியும் என இன்போசிஸ் நிர்வாகத் துணைத் தலைவர் மற்றும் குரூப் HR தலைவர் கிரிஷ் சங்கர் அறிவித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி ஊழியர்களின் பணி திறனுக்கு ஏற்ற அடிப்படையில் ஸ்கில் டேக் மற்றும் டிஜிட்டல் ஸ்கோர் அளிக்கப்படுகிறது. அத்துடன் புது திட்டத்தின் வாயிலாக ஒரு குழுவிலிருந்து மற்றொரு தொழில்நுட்ப குழுவுக்கு வேலையை மாற்றிக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.