Categories
மாநில செய்திகள்

“போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தைரியம் இருந்தால் வரட்டும்”….. ஆ.ராசாவை தடுத்த முதல்வர் ஸ்டாலின்…. வெளியான தகவல்…!!!

தமிழக அரசியலில் எப்போது பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி ஆ.ராசா திராவிடர் கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மாற்றி விட்டு இந்துத்துவ அமைப்பினர் சர்ச்சைகள உருவாக்கினர். பாஜக இதை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்தி வருகிறது. 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைந்து விடாமல் போராட்டம், கடையெடுப்பு, ஆர்ப்பாட்டம் என்று பாஜக கொண்டு செல்கிறது. அதனை தொடர்ந்து திமுகவில் கொள்கை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பேசி எதிர்த்தரப்பை கலங்கடிப்பவர்களில் ஆராசாவும், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் முன்னிலையில் வகிக்கின்றனர். இதனாலையே பாஜாகவினரால் இவர்கள் இருவரும் அதிகம் விமர்சிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

திமுக தலைமைக்கு இவர்களுக்கும் இடைவெளியை உருவாக்கும் வேலைகளையும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் முன்னெடுத்து வருகிறது.இதனையடுத்து பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கை மக்களிடையே அம்பலப்படுத்தி வரும் பழனிவேல் தியாகராஜன் பேச்சு வட இந்தியாவிலும் வீடியோ மூலம் பரவிய நிலையில் அவரது வாகனம் மீது பாஜகவினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். மாநில அமைச்சரின் காரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு பாஜகினர் இறங்கி உள்ள நிலையில் ஆ. ராசா விவகாரத்தில் அவருக்கு எதிராகவும் இது போன்ற சம்பவங்களை ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை முதல்வர் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது.அதில் பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி, ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் காலெடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன் என்று மிரட்டல் விடுக்க கூடிய வகையில் பேசி உள்ளார்.

அதனை போல பல இடங்களில் இருந்தும் வந்த தகவலின் அடிப்படையில் தான் உளவுத்துறை முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதன் பிறகு ஆ.ராசாவிடம் முதல்வர் ஸ்டாலின் இப்போது நீலகிரி செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் நேற்றைய அவரது பயணம் ரத்தானது. ஆட்சியில் இருக்கும் போது இதுபோன்ற பின்வாங்குவது எதிரிகளுக்கு உத்வேகத்தை தராத என்ற பேச்சுக்கள் திமுக மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறாராம். அரசியல், அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நச்சு அரசியல் சக்திகளோடு சரிக்கு சமமாக நின்றால் நமக்கும் தான் இழுக்கு. அதனால் ‘ஒதுங்கி செல்வது தவறல்ல’ என்ற நிலைபாட்டில் ஸ்டாலின் இருக்கிறாராம். ஆனால் மீண்டும் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Categories

Tech |