Categories
தேசிய செய்திகள்

போலி வெடிகுண்டுகளை வைத்து சோதனை…. எதற்காக தெரியுமா?…. சிறப்பு படை போலீசார் அதிரடி…..!!!!

நாட்டில் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் போலீசருக்கு கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் முயற்சியாக போலியான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நகர் முழுவதும் வைத்து அதனை போலீசார் கண்காணிக்கிறார்களா? என்ற சோதனை நடைபெறும். அப்படி அந்தந்த பகுதியில் போலியான வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க தவறினால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பும் 15 போலியான வெடிகுண்டுகளை வைத்து அவற்றை போலீசார் கண்டறிகிறார்களா? என்ற சோதனையில் டெல்லி சிறப்பு படை ஈடுபட்டுள்ளது. இதில் 15 வெடிகுண்டுகளில் சரியான நேரத்தில் 10 வெடிகுண்டுகள் போலீசாரல் கண்டறியப்பட்டது. அதனை போல சோதனை, ரோந்து பணி ஆகியவையும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |