காப்பி வித் காதல் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சுந்தர்.சி படப்பிடிப்பில் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகின்றார் சுந்தர் சி. தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தநிலையில் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு நேற்று நடைபெற்றது.
இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பங்கேற்ற சுந்தர் சி பேசியுள்ளதாவது, நீண்ட நாட்களாகவே ஃபீல் குட் திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் படம் முழுவதையும் பார்த்து சிரிக்க வேண்டும் என நினைத்தேன். உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை அப்படித்தான் துவங்கினேன். அதில் முதலில் நக்மா தான் கதாநாயகி நடிப்பதாக இருந்தது. பின் கதை வேறு விதமாக மாறியது. அதன் பின்னர் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தையும் பீல் குட் திரைப்படமாக இயக்க வேண்டும் என ஆரம்பித்தேன். ஆனால் சந்தானம் வந்ததும் இத்திரைப்படத்தின் ரூட்டே மாறியது. இந்த முறை காபி வித்து காதல் திரைப்படத்தில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கின்றது.
ஊட்டி என்பது எல்லோருக்கும் சுற்றுலா தளமாகவே தெரியும் என்றால் அது எனக்கு வேலை பார்க்கும் இடமாக மாறிவிட்டது. மூன்று விதமான குணாதிசயங்களுடன் இருக்கும் மூன்று சகோதரர்கள் அவர்களுக்கிடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்ப பிரச்சனை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி திரைப்படத்தை உருவாக்கி இருக்கின்றோம். இத்திரைப்படத்தில் ஆறு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். நடிகர் யோகி பாபு இதில் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரம். இந்த மூன்று ஹீரோக்களில் தீயா வேலை செய்யணும் குமாரு என சொல்ல வேண்டும் என்றால் ஜீவாவை சொல்லலாம்.
இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என கூறுவது என்றால் சம்யுக்தாவை சொல்லலாம். இத்திரைப்படத்தில் அவர் கண் சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதுபோலவே ரைசாவை பார்க்கும் போது யாரிடமும் அட்ரஸ் கேட்டு வந்தவர் போல காட்சியளிப்பார். ஆனால் கேமரா என்று வந்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். ஆக்சன் படத்தில் ஹீரோக்களுக்கு அடிப்படும் என கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ரொமான்டிக் திரைப்படத்தில் கதாநாயகி அடிபடுவது என்பது புதுசாகத்தான் இருக்கும் அது வேற யாரும் இல்லை. நம்ம மாளவிகா சர்மா தான். அவரை டேமேஜ் ஹீரோயின் என்று கூட சொல்லலாம். அவர் ஒரு நாள் இருந்தாலும் கூட அது பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். இதுபோல பட அனுபவங்கள் குறித்து அவர் பேசி உள்ளார்.