நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கே.ஆர். ராஜேஷ்குமார் இருக்கிறார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்து வருகிறார். தற்போது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் கிழக்கு மாவட்ட திமுகவில் மீண்டும் கே.ஆர்.ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் திமுகவை பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கட்சியினரை அரவணைத்து செல்வதில் மிகவும் வல்லவர். கட்சி மேலிடத்தின் சிபாரிசும் இருப்பதால் இவரை எதிர்த்து யாரும் வேட்பமனு தகவல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கே.ஆர். ராஜேஷ்குமாரை முன்வைத்து புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இது குறித்து வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில், “மணல் அள்ளக்கூடாது என்று கே.பி.ராமசாமி நிறுத்திவிட்டார். எந்த மாவட்டத்திலும் எந்த மாவட்ட செயலாளரும் இப்படி கூப்பிட்டு மணல் அள்ளுங்க என்று சொன்னதே கிடையாது. நான் ஒருத்தன் தான் சொன்னேன். அதனைத் தொடர்ந்து மீதி எல்லாம் அந்த கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்த பணம் வாங்கிட்டு போயிடுறான். நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்க எல்லாம் சேர்ந்து செய்வாங்க என்று கட்சிக்காரங்க கையில் கொடுத்தேன்” என்று பேசி உள்ளார். இதனையடுத்து இயற்கை வளங்களை சுரண்டக்கூடாது என்ற நோக்கில் சட்டவிரோதமாக மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக முறையாக டெண்டர் விடப்பட்டு குறிப்பிட்ட மட்ட வரை தான் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும். அப்படி இருக்கையில் கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக திமுக எம்பி கே.ஆர்.ராஜேஷ்குமார் கூறியது முறை கேட்டிற்கு வழிவகக்கூடிய விஷயமாகத்தான் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி நாமக்கல் வட்டாரத்தில் விசாரிக்கும் போது, திமுகவை சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் ராசிபுரம் அடுத்துள்ள காக்காவேரி பகுதியில் பல ஆண்டுகளாக மணல் அள்ளி வந்துள்ளார். இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த 5 மாதங்களில் இவரை மணல் அள்ளக்கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளர் தெரிவித்து இருக்கிறார். அதற்கு பதிலாக திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கே.பி.ராமசாமி என்பவருக்கும் மணல் அள்ள எம்பி அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக எம்பி மற்றும் அனிதா செங்கோட்டையன் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் முழு வீடியோ கிடைக்கவில்லை. அதனால் எப்போது பேசினார், யாரெல்லாம் உடன் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நாமக்கல் கிழக்கு திமுகவிற்கு மீண்டும் மாவட்ட செயலாளர் கேஆர். ராஜேஷ்குமாரை நியமிக்க கட்சி தலைமை காய்களை நகர்த்தி வரும் நிலையில் வீடியோ விவகாரம் புதிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.