Categories
மாநில செய்திகள்

ஓராண்டில் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம்… மேலாண்மை துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு…!!!!!

கடந்த ஓராண்டில் மட்டும் 4.92 லட்சம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டிருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இது பற்றி திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் 2014 -15 ஆம் வருடம் மட்டும் ஓய்வூதியம் பெற்று வந்த 4.38 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2015 -2016 முதல் 2020- 2021 ஆம் வருடம் வரையில் 10.82 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மொத்தமாக ஏழு வருடங்களில் 15.20 லட்சம் பேர் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் நாலு லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் நிகழ் நிதியாண்டில் ஓய்வூதியத்திற்கு என்று ரூபாய் 4,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தனது அறிக்கையில் அமைச்சர ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Categories

Tech |