வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன் குறவர் இன மக்கள் சார்பில் மனு கொடுக்க சென்ற போது தீண்டாமை கடைப்பிடித்து, இருக்கை கொடுக்காமல் நிற்க வைத்தே பேசியதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வனவேங்கை கட்சி தலைவர் இரணியன் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர் மீது புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திக்க வரும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்களை (என்னை) நிற்க வைத்து கேள்வி கேட்பதும் ஒருவகையான தீண்டாமை தான். அங்கு நாற்காலிகள் இருக்கின்றது.
நாற்காலிகள் இருந்தும் என்னை அமர வைக்காததற்கு என்ன காரணம் ? நான் குறவன் என்ற சமூகத்தை சார்ந்தவன் என்பதற்காகவா? இல்ல ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காகவா? இதே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்திலையோ அல்லது அவர் சார்ந்த சமூகத்திலையோ, யாரேனும் வந்தால் கண்டிப்பாக உட்கார வைப்பதற்கு வாய்ப்பு கொடுத்து இருப்பாரா ? கொடுத்திருக்க மாட்டாரா ?
எங்களுடைய சமூகத்தின் அடையாளத்தை குறிப்பிட்ட பிறகுதான் அவர் கால் மேல், கால் போட்டு பேசினார். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் கோரிக்கை கொடுக்க அமைச்சரை பரக்கச் சென்றோம். கோரிக்கை மனுவை கொடுக்க சென்றோம்.
மனு கொடுக்க வந்தால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் அனுசரிப்பார்களா ? பேசுவாங்களா ? அதைத்தான் கேட்கின்றேன். நாங்கள் அதிகாரத்தில் இல்லாததுனால வலிமையற்ற மனிதர்களாக இருப்பதால் எப்படி வேணாலும் இருக்கலாம் ? எப்படி வேணாலும் பேசலாம் ? என்ற நிலைப்பாடும் ஒரு தீண்டாமை தான். அதுதான் நாங்கள் வருத்தப்படுறோம் என இரணியன் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்தார்.