Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை..!!!!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து செயல்முறைகளை பற்றி ஆய்வு செய்ய அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக அதிகமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் கூட அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்யவும் அரசு நலத்திட்டங்களை சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை முறையாக கண்காணிக்க ஏதுவாக மாவட்ட கல்வி அலுவலகம் இடைக்கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் என பிரிக்கவும் பணி பகிர்மானம் செய்து ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் அதில் புதிதாக 32 மாவட்ட கல்வி அலுவலக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேற்கண்ட அடிப்படையில் பட்டியலில் உள்ளவாறு அனைத்து அலுவலகங்களிலும் சீரான எண்ணிக்கையில் அடிப்படையில் பணியாளர்களின் நியமனம் செய்த ஆணை பிறப்பிக்கப்படுவதுடன் அவற்றின் அடிப்படையில் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் இது குறித்த அறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |