சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வீணாகும் காய்கறிகளை வைத்து மின்சாரம் தயாரிக்க இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆவின் நிறுவனத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து மக்கும் தன்மையுடையதாக மாற்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மஞ்சப்பை பயன்படுத்தும் அனைவரும் சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை உடையவர்கள்.
பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பிளாஸ்டிக் தயாரிக்கும் ஆலைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்