Categories
சினிமா

“நா ரொம்ப லவ் பண்ணேன்” ஆனா அவங்க கிடைக்கல…. எதுக்காக அப்படி பண்ணாங்கன்னு தெரியல…. சோகத்தில் விக்ரம்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு பட குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், “இந்த படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த ராவணன் படத்தில் ஐஸ்வர்யாராய் மீது காதல் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் இராவணன் இறந்து விடுவார். இதனை தொடர்ந்து இந்த முறை பொன்னின் செல்வன் படத்தில் இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்” என்று ஜாலியாக பேசினார்.

Categories

Tech |