ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை சிலர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த பெண்களுக்கு சூனியக்காரி பட்டத்தை சூட்டியுள்ளனர். அதன்பிறகு இரும்பு கம்பியை சூடாக்கி 4 பெண்களின் உடம்பிலும் சூடு போட்டதோடு, மனித கழிவுகளை உண்ணும் மாறும் வற்புறுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டனர். அதன்பின் பெண்களிடம் நடத்திய விசாரணையில் ஜோதின் என்பவர் மங்கள் முர்மு, உமேஷ் முர்மு, சுனில் முர்மு, லக்கி ராம் முர்மு, முனீஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து தங்களை கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளனர். அந்த தகவலின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.