Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம்… ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் பற்றி முக்கிய ஆலோசனை…!!!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணையை அறிக்கையை ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.

மேலும் இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது பற்றி இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது. இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் சட்டசபையில் தாக்கல் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது. இது தவிர ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது.

மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது போன்ற பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது. இது தவிர தமிழகத்தின் நலன் பல முக்கிய பிரச்சினைகள் பற்றி இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழக சட்டசபை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அந்த நாள் சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றலாம் என்பது பற்றியும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகின்றது. இதனால் அடுத்த மாதம் தொடங்க இருக்கின்ற சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |