பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அமைச்சரவையில் தகவல் துறை மந்திரியாக இருக்கிறார் மரியும் அவுரங்கசீப். பெண் மந்திரியான இவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள். இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள காபி கடைக்கு இவர் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு வாழ் பாக்கிஸ்தானியர்கள் அவரை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கின்றனர். எனினும் அவர்களை கண்டு கொள்ளாமல் மரியும் நீண்ட நேரமாக தனது செல்போனில் வேலையில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளார். பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புகளால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் 3.3 கோடி பேர் நிவாரணம் தேடி அலையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.
இதில் பொது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் கூட பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் அரசில் காணப்படும் ஊழலை பற்றி எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். மேலும் இது பற்றி பிரதமரின் ஆடியோ உரையாடல் ஒன்றும் கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதுவும் அரசுக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் லண்டனுக்கு வருகை தந்திருக்கிற பாகிஸ்தான் பெண் மந்திரிக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. தெருவில் மரியும் நடந்து செல்லும் போது அவரை பின்தொடர்ந்து வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் திருடி திருடி என கூச்சலிட்டு இருக்கின்றார்கள்.
இது பற்றி வெளியான வீடியோ ஒன்றில் பேசிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் பெரிய விஷயங்களை எல்லாம் பேசிய மரியும் லண்டனில் தனது தலையில் துப்பட்டாவை கூட போட்டுக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த மரியும் இம்ரான்கானின் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கான அரசியல் நம்முடைய சகோதர சகோதரிகளே நன்றாக பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது காண்பதற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும் தி டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மரியும் நிலைமை நன்றாக எதிர்கொண்டார் என அவருக்கு பாகிஸ்தானிய மந்திரங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்களால் மரியும் தொடர்ந்து தொல்லைக்கு ஆளாகியுள்ளார் என அந்த பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.