Categories
உலக செய்திகள்

OMG: ஓநாய் கடித்து இறந்த வினோத கரடி…. சோகத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்…..!!!!

அமெரிக்க நாட்டில் இருப்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை பனி கரடி ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அந்த கரடி ஓநாய் கடித்து இறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கரடி நியுயோர்க்கிலுள்ள ஒரு காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதுவரை காணபட்ட 10 லட்சம் கரடிகளில் இதுவொரு வினோத கரடி ஆகும். இதனால் இந்த கரடி இறந்தது ஆய்வாளர்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கரடி அமெரிக்க நாட்டின் மிக்சிகனிலுள்ள வனப்பகுதி ஒன்றில் முதல் முறையாக செப்டம்பர் 6ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அது வெண்மை நிறத்தில் இருக்கும்.

இதன் கழுத்துபகுதி மட்டும் லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். உலகம் முழுதுமே இந்தவகை கரடிகள் வெறும் 100 மட்டுமே காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது மிக்சிகனில் சுமார் 1 லட்சம் கரடிகள் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இவற்றில் நீங்கள் வெள்ளை கரடியை பார்ப்பது மிக மிக அரிது. அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இந்த வெள்ளை கரடியின் வருகையை நல்ல காலத்தின் பிறப்பு என கொண்டாடுகின்றனர்.

Categories

Tech |