மட்டிக்கண்மாய் நிரம்பி மறுக்கால் பாய்ந்ததை கொண்டாடும் விதமாக விவசாயிகள் கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட மட்டிக்கரைப்பட்டி கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் மட்டிக்கண்மாய் இருக்கின்றது. இந்த கண்மாயில் இருந்து 600 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் நடைபெறும். சென்ற சில வருடங்களாக கண்மாயில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்ததால் போதிய நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தார்கள்.
இந்த நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் கரந்தமலை பகுதியில் இருந்து உருவாகி சிங்கம்புணரி வழியாக வரும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் மட்டிக்கால்வாய் வழியாக மட்டிக்கண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் சென்று சில நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையால் தற்போது பாலாற்றில் இருந்து தண்ணீர் வருகின்றது.
அந்த தண்ணீரானது மட்டிக்கால்வாய் வழியாக மட்டிக்கண்மாய்க்கு வந்தது. சென்ற பத்து நாட்களுக்குப் பிறகு இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுக்கால் பாய்கின்றது. இதனை விவசாயிகள் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் தண்ணீரில் மலர் தூவியும் சென்ற 23ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியலிட்டு வருண பகவானையும் விவசாய நிலங்களையும் வழங்கினார்கள். இதன் பின்னர் பலியிட்ட ஆடுகளை சமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கிடா விருந்து வைத்தார்கள்.