பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருவதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாக்., ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், I.S.I .உளவுத்துறை மற்றும் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் மற்றும் அதன் தோழமை படைகளின் கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாக்., ராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
இது குறித்து பலூசிஸ்தான் ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் ஆர்யா (Gaurav Arya) கூறுகையில், பாகிஸ்தானின் பாதி பலூசிஸ்தான். அங்கு வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களை மதக்கல்வியின் பெயரால் பாகிஸ்தான் அரசு மூளைச்சலவை செய்கின்றது. இந்த முயற்சி பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.